Monday, August 20, 2012

 புது மொழி

இந்தியா விவசாயம் இல்லா விவசாயிகள் நாடு ...
மலிந்து போன மலங்களான அரசியல் வியாதிகளின் சொப்பன பூமி .
.நாடும் வீடும் வெட்டு காடும் மலையும் கடலும் தாண்டி பொருள் கொண்டு வரும் தாய்மகனின்...
பொருளை கொள்ளை அடிக்கும் சுங்கவரி முதலாளிகளின் ஊர் நம்
ஊர் ..
பணத்தின் மேல் பருந்தும் பறக்காது இது பழமொழி..
அதை புதுமொழியாக்கியவர் நம் அரசாங்க அதிக்காரிகள் ---லஞ்சம் எனும் பெயரில்
                             வ.ந.ஹரிகுமார் 

Wednesday, August 15, 2012

நட்பு

வானம் தன் தோகையை விரித்தாடுது நம் நட்ப்பை பார்த்து
அதில் சிந்திய சிரிப்பாய் மழை துளிகள் நம் கன்னத்தில் ---
நண்பர்கள் தினம் அது நண்பர்கள் ஆனா நமக்காக வானம் கொண்டாடுது
மேகம் இடியென முரசு கொட்டுது அதில் மின்மினி ஒளியாய் சில மின்னல் கீறல்கள்
சுதந்திர காத்து நம் மேனியை தழுவி சாரலென மழை துளியாய் பொழிவது போல் நம்
நட்பு காள மேக புலவர் போல் சிறந்து விளங்கட்டும்
                                                                    வே.ந.ஹரிகுமார்

துயில் எழுவோம்

காலையில் துயில் எழுப்ப சேவல் இல்லாத குறையை தீர்த்து வைத்தது கடிகார ஓசை
காலையில் பொழிந்த  மழை சாரல் மேனியில் தழுவி புணர்ந்தது ஆசையாய்
மணக்கும் மல்லிகை வாசம் மூக்கை துளைத்து நாசியில் சென்று குடி புகுந்தது நேசமாய்
பூ சூடிய பெண்கள் கையில் பனித்துளியாய் மல்லிகை பூக்கள்

பாலை வனத்தில் தோன்றும் பனித்துளி போன்றது  வாழ்க்கை
பிறக்கும் பொது அழுகிறோம் பிறந்த பின்பும் அழுகிறோம்
வாழ்க்கையை வாழ பிறந்த நாம் பலநேரம் வாழ்க்கையை மறந்து வாழ்கிறோம்
பட்டாம் பூச்சி நாம் வாழ்க்கையில் பல பட்டம் சுமந்தவர்  நாம்
போராட்டம் தான் நம் வாழ்க்கை போராடுவோம் வாழ்க்கைக்கு
நீரோட்டமாய் வாழ்க்கை அதில் சில கற்களாய் பல இன்னல்கள்
தடையை தாண்டுவதே நமக்கு நமக்கு வேலை
பலர் தடைகளை உண்டாக்கினால் நிமிர்ந்து நிற்கவே பல தூண்கள்

                                                                                         வே.ந.ஹரிகுமார்